ஆற்றில் கவிழ்ந்த கார்! மணமகன் உட்பட அனைவரும் பலி- திருமணத்துக்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்



இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட காரில் சென்ற 9 பேரும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள சோட்டி புலியா பாலத்தில் இருந்து சம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பலியாகியுள்ளனர்.

உடனடியாக விரைந்து வந்த மீட்புப்படையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமண நிகழ்வுக்காக சென்ற போது நடந்த இந்த விபரீத சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.