இந்திய -சீன உறவு: அமைச்சரின் கருத்தால் சர்வதேச அரங்கில் பரபரப்பு!

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் முனிச் பாதுகாப்பு மாநாடு குழு விவாதத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அதன் பின்னர் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

1975 முதல் இந்திய -சீன எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் எதுவும் இல்லை. 45 ஆண்டுகளாக நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. ராணுவப் படைகளை எல்லைக்கு கொண்டு வரக்கூடாது என்று சீனாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை சீனா அண்மை காலமாக மீறி வருகிறது.

இதன் விளைவாக சீனாவுடனான உறவு தற்போது மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளது. எல்லையின் நிலையே இருநாட்டின் உறவை தீர்மானிக்கும் என்பதை சீனா உணர்ந்து செயல்பட வேண்டும். சீனாவுடனான உறவு மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளது.

எங்களை சீண்ட வேண்டாம்: கூலாக ஏவுகணை சோதனை நடத்திய ரஷ்யா!

அத்துடன் ஒரு பெரிய நாடு தான் அளித்த உறுதிமொழிகளை மீறி செயல்படும்போது, அது ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் பிரச்சினையாக அமையும் என்று கருதுகிறேன்.

இதைத் தொடர்ந்து ஜெர்மனியின் பொருளாதார மேம்பாட்டு துறை ஸ்வென்ஜா ஷூல், அயர்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்துப் பேசியதாக ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.