எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு – சூசகமாக தகவல் வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்



இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தங்க்ள மேற்கொள்வதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு மத்திய வங்கி ஆளுநர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலை பாதிக்கும் குறைவாகவே உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகள் பலவற்றின் எரிபொருள் விலை அட்டவணையையும் பதிவிட்டு, அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.