கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார்.. திருமண விழாவுக்குச் சென்ற மணமகன் உட்பட 9 பேர் பலி.! <!– கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார்.. திருமண வி… –>

ராஜஸ்தானின் கோட்டாவில் சம்பல் ஆற்றில் கார் விழுந்து மூழ்கியதில் திருமண விழாவுக்குச் சென்ற மணமகன் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனில் நடைபெற இருந்த திருமணத்துக்கு ராஜஸ்தானில் இருந்து மணமகன் உட்பட 9 பேர் ஒரு காரில் புறப்பட்டுச் சென்றனர். சோட்டி புலியா என்னுமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சம்பல் ஆற்றுக்குள் பாய்ந்தது.

ஆற்றில் மூழ்கிய கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. காரில் இருந்த மணமகன் உட்பட 9 பேரும் உயிரிழந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.