கனடாவில் அதிகாலை தூக்கத்தில் கனவு வந்ததாக நினைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! கட்டுக்கட்டாக பணம் கைக்கு வந்த அதிர்ஷ்டம்


கனடாவில் அதிகாலையில் தூக்கத்தில் இருந்த போது கோடீஸ்வரர் ஆன தகவல் அரவிந்த் ராகேஷ் கஸ்தூரி என்ற இளைஞருக்கு வந்த நிலையில் அதை கனவு என அவர் நினைத்துள்ளார்.

ஒன்றாறியோவின் பர்லிங்டன் நகரை சேர்ந்தவர் அரவிந்த ராகேஷ் கஸ்தூரி (33).
இவர் சமீபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அதிகாலை 4.30 மணிக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறது.

அதில் லொடோ 6/49 லொட்டரி குலுக்கலில் ரூ 1,58,95,464.02 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கஸ்தூரி கூறுகையில், அதிகாலையில் தூக்கத்தின் போது பொதுவாக யாருடைய மூளையும் சிறப்பாக வேலை செய்யாது என சொல்வார்கள்.

அது போல தான் எனக்கு மின்னஞ்சல் வந்த போது நான் கனவு காண்கிறேனா இல்லையா என எனக்கு சரியாக தெரியவில்லை.
அதனால் நான் என் போனை அப்படியே தூரமாக தூக்கி வைத்துவிட்டேன்.

பின்னர் அடுத்தநாள் அதை பார்த்த போது எனக்கு வார்த்தையே வரவில்லை, அதிர்ச்சியாகி விட்டேன். ஏனெனில் மிகப்பெரிய பரிசு விழுந்தது என்பதை தெளிவாக பார்த்தேன்.
என் மனைவியும் இதை முதலில் நம்பவில்லை, சரியாக பார்த்து உறுதிப்படுத்த சொன்னார்.

பரிசு பணத்தில் புதிய வீடு வாங்கவுள்ளேன், என் வாழ்வில் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலியாக நான் இதுவரையில் இருந்ததில்லை என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.