கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை <!– கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பே… –>

கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணிக்கும்போது பலர் இடையூறு அளிக்கும் வகையில் செல்போன் பயன்படுத்துவதாக சக பயணிகள் புகாரளித்ததை அடுத்து கேரள அரசு போக்குவரத்து கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், பயணிகளுக்கு தொடர்ந்து தொந்தரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்க நடத்துனர், ஓட்டுநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த புதிய உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.