தனுஷ் விஷயத்தில் பயந்தது மாதிரியே நடந்துடுச்சே!

நடிகராக கோலிவுட்டுக்கு வந்த
தனுஷ்
பின்னர் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் அவதாரம் எடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ப. பாண்டிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து தன் தலைவரான ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார் தனுஷ். அண்ணாத்த படத்தை அடுத்து இரண்டு படங்கள் மட்டும் நடித்துவிட்டு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் ரஜினி.

தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து
தலைவர் 170
அதாவது ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

தலைவர் 170 படத்தை தனுஷ் அல்ல அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கிறாராம். அருண்ராஜா தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தான் ரஜினிக்காக ஒரு கதை வைத்திருப்பதாக நெஞ்சுக்கு நீதி தயாரிப்பாளர்களான போனி கபூர் மற்றும் ராகுலிடம் கூறியிருக்கிறார்.

அவர்களோ உடனே ரஜினியிடம் அபாயின்ட்மென்ட் வாங்கி அருண்ராஜாவை கதை சொல்ல அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கதையை கேட்ட ரஜினியோ, நாம கண்டிப்பா படம் பண்றோம் கண்ணா என்று கூறிவிட்டாராம்.

இதன் மூலம் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற தனுஷின் கனவு நிறைவேறவே நிறைவேறாது என்பது தெரிய வந்திருக்கிறது.

Dhanush:மகன் விவாகரத்து: தனுஷ் அப்பாவுக்கு குவியும் பாராட்டு
முன்னதாக தலைவர் 170 படத்தை தனுஷ் இயக்க, ஐஸ்வர்யாவும், அவரின் தங்கை சவுந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்த உடனேயே இனி தனுஷின் கனவு நிறைவேறாது என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.