மீன் பிடிக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. கடலூர் அருகே நிகழ்ந்த சோகம்..!

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் சேற்றில்சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே மருதாடு சேர்ந்தவர் அய்யப்பன். கூலி தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடை உடன் வந்தவர்கள் உடனடியாக அவரை தேடியுள்ளனர்.

அப்போது அய்யப்பன் சேற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.  அவரை மீட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.