ரஜினியின் பெயரை சொல்லி இதெல்லாம் செய்தாரா கஸ்தூரி ராஜா ? திடுக்கிடும் தகவல்கள்..!

நடிகர்
தனுஷ்
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2004 ஆம் ஆண்டு திருமணம் ஆனா இவர்களுக்கு
யாத்ரா
மற்றும்
லிங்கா
என இரு மகன்கள் இருக்கின்றனர். எதோ சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் பிரிவிற்கு காரணமாக பல பேர் பல காரணங்கள் கூறி வருகின்றனர். அதில் எது உண்மை எது பொய் என்றே பலருக்கும் தெரியாமல் உள்ளது.பலபேர் பல செய்திகளை கூறிவரும் நிலையில் தற்போது ஒரு செய்தி தீயாய் பரவிவருகிறது.

மகான் படத்தை கடுமையாக விமர்சித்த கஸ்தூரி…என்ன சொல்லிருக்காங்கனு நீங்களே பாருங்க..!

அதாவது தனுஷின் தந்தையும், இயக்குனருமான
கஸ்தூரி ராஜா
ரஜினியின் பெயரைச்சொல்லி கடன் வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கஸ்தூரி ராஜா சொந்தமாக தேனியில் ஒரு திரையரங்கம் மற்றும் பல வியாபாரம் செய்துவருகிறாராம்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரி ராஜாவின் திரையரங்கமும், அவர் செய்துவந்த வியாபாரமும் கடுமையான நஷ்டத்திற்கு சென்றதாம். அதை சரிக்கட்ட கஸ்தூரி ராஜா பல இடங்களில் கடன் கேட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு கிடைக்கவில்லை.

தனுஷிடமும் அப்போது பணம் இல்லாத காரணத்தால் வெளியில் தான் ரஜினியின் சம்மந்தி என்று சொல்லி கடன் கேட்டிருக்கிறார் கஸ்தூரி ராஜா. இந்த செய்தி ரஜினியின் காதுக்கு செல்ல கடும் கோபத்திற்கு ஆளானாராம் ரஜினி.இனிமேல் என்பெயரை யாரும் உபயோகிக்கக்கூடாது என
ரஜினி
காட்டமாக கூறியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

இதன் காரணமாக ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜாவிற்கு சமீபகாலமாக பேச்சவார்த்தையே இல்லை என்று தெரிகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகரின் தந்தைக்கு பண கஷ்டமா, வதந்திக்கு ஒரு வரைமுறை இல்லையா என ரசிகர்கள் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.