அஞ்சல் துறை பணிக்கு தேர்வான 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழர்கள் ; தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் <!– அஞ்சல் துறை பணிக்கு தேர்வான 946 பேரில் 46 பேர் மட்டுமே தம… –>

தமிழகத்தில் அஞ்சல் துறை பணியிடங்களுக்கு தேர்வான 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழர்கள் எனக் கூறியுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அறிவிப்பை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் சூழலில், தமிழகத்திலுள்ள அஞ்சல்துறையில் பணியாற்ற வடமாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது கண்டத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலை திரும்பப் பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியுள்ள வேல்முருகன், தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறைக்கான பணியிடங்களுக்கான தேர்வை, மாநில அளவிலேயே நடத்தவும், இட ஒதுக்கீடு நடைமுறையை பின்பற்றவும் முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசு அலுவலக பணியிடங்களுக்கு, தமிழருக்கே முன்னுரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.