அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி இழுத்துச் சென்று தாக்கிய வழக்கில் ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் மார்ச் 7 வரை சிறையில் அடைக்க நீதிபதி முரளிகிருஷ்ணனா உத்தரவிட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெறும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிணை கிடைக்கவில்லையெனில் உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என வழக்கறிஞர் டி.செல்வம் பேட்டியளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.