அன்று 3 பேர்… இன்று 2 பேர்… இரண்டாவது முறையாக வாக்களித்தவர் வேதனை

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது முறையாக வாக்களிக்க வந்த ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த எழிலரசன் என்பவர் கூறுகையில், கடந்த 19-ந்தேதி சனிக்கிழமையும் நான் வாக்களித்தேன். இன்று இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்களிக்க வந்துள்ளேன். அன்று எங்கள் குடும்பத்தில் 3 பேர் வாக்களித்தோம். பணி காரணமாக எனது மகன் வெளியூருக்கு சென்று விட்டார். எனவே இன்று இரண்டு வாக்குகள் மட்டுமே பதிவு செய்துள்ளோம். மற்றபடி எங்களுக்கு மறு வாக்குப்பதிவில் எந்தவித சிரமமும் இல்லை என்றார்.

காலை 9 மணி நிலவரப்படி ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் 9 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.