செய்றதையும் செஞ்சுட்டு ரஜினிக்கு இப்படி ஒரு ஆசையா?

தன் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் தங்கள் கணவனுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார் ரஜினி. கெரியரை விட குடும்பம் முக்கியம், அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று மகள்களிடம் அடிக்கடி கூறுவாராம் ரஜினி.

மகள்கள் கெரியரில் ஓவராக தீவிரம் காட்டினால் திட்டவும் செய்திருக்கிறார். அவர் ஆசை நியாயம் தான். ஆனால் மகள்களை நன்றாக படிக்க வைத்து, தங்கள் கால்களில் நிற்க வைத்துவிட்டார் ரஜினி.

Dhanush:ஏங்கிப் போயிருக்கும் தனுஷ்: கருணை காட்டுவாரா ரஜினி?
அவர் கொடுத்த தைரியத்தில் திரையுலகிற்கு வந்துவிட்டனர் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும். படங்கள் தவிர்த்து பிற விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறார்கள். அக்காவும், தங்கையும் தொழில் முனைவோரும் கூட.

இப்படி கெரியரில் வெற்றிகரமாக இருப்பவர்களை போய், குடும்பத்தை மட்டும் பாரு என்று சொன்னால் எப்படி கேட்பார்கள். கெரியரில் அதுவும் வெற்றிகரமாக இருக்கும் எந்த பெண்ணும் குடும்பத்துடன் சேர்த்து வேலையையும் பார்த்துக்கொள்ளத் தான் செய்வார்.

செய்வதை எல்லாம் செய்து மகள்களை சொந்தக்காலில் நிற்க வைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்தை மட்டும் கவனிக்க வேண்டும் என்று ரஜினி ஆசைப்படுகிறார். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.