யார் பார்த்தால் எனக்கென்ன, வேணும்னே 'அப்படி' செய்த தனுஷ்?

தன் காதல் மனைவியான
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தை பிரிந்துவிட்டார்
தனுஷ்
. அவர் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த படத்தில் தனுஷுக்கு ஸ்டைலிஸ்டாக காவ்யா ஸ்ரீராம் வேலை செய்கிறார். இந்நிலையில் காவ்யாவுடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்று சாப்பிட்டார் தனுஷ்.

Dhanush:கமலுக்கு ஒரு அம்ரிதா, தனுஷுக்கு காவ்யா: சூப்பர் பெண்மணிகள்
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. தனுஷுடன் சேர்ந்து சாப்பிடும் அந்த இளம்பெண் யார் என்று பலரும் ஆராய்ச்சி செய்தார்கள்.

தான் காவ்யாவுடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்றால் இதெல்லாம் நடக்கும் என்பது தனுஷுக்கு தெரியும். ஆனால் அடுத்தவர்களுக்காக வாழ முடியாது என்று தன் மனம் போன்று செய்திருக்கிறார் தனுஷ்.

இதற்கிடையே தனுஷ் வேண்டுமென்றே இப்படி செய்திருக்கிறார் என்று சமூகவலைதளவாசிகள் விமர்சிக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்தால் ரஜினி மனசு கஷ்டப்படாதா என்று தலைவர் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று இரு வீட்டாரும் விரும்புகிறார்கள். அதற்கான முயற்சியும் செய்து வருகிறார்கள். ஆனால் பலன் தான் இதுவரை கிடைத்தது போன்று இல்லை.

நான் இனிமேல் சிங்கிளாகத் தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறாராம் தனுஷ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.