பல மடங்கு உயரும் சம்பளம் – அமைச்சர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா – 2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் சம்பளம் உயரும்.

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை, வழக்கம் போல் சட்டப்பேரவைக் கூடியது. அப்போது, மாநில சட்டப்பேரவை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகள் திருத்த மசோதா – 2022 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 67 கோடி ரூபாய் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். புதிய மசோதா மூலம் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் சம்பளம் உயரும்.

இதற்கிடையே, காவி கொடி தேசியக் கொடியாக மாறும் எனக் கூறிய கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் பதவி விலக கோரியும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.