சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த வியாபாரியிடம் செல்போனை திருடிவிட்டு தப்பி சென்ற இளைஞர்களின் சிசிடிவி <!– சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த வியாபாரியிடம் செல்போனை … –>

புதுச்சேரியில், சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த வியாபாரியிடம் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் செல்போனை திருடிவிட்டு தப்பி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த 24ஆம் தேதி பணி நிமித்தமாக வந்த வடமாநில வியாபாரி, மிஷன் வீதியில் சாலையில் நள்ளிரவு தூங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக 2 சக்கர வாகனங்களில் வந்த 6 இளைஞர்கள் ஒருவன், வியாபாரியின் மேல்பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிவிட்டு தப்பிச் சென்றான்.

இதனை சுதாரித்த வியாபாரி, இளைஞர்களை துரத்தி சென்றபோதும் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டனர்.  இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.