துவங்கியது போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ரஷ்ய படைகள் வெளியேற உக்ரைன் வலியுறுத்தல்| Dinamalar

கோமல்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை பெலாரஸில் நடைபெற்றது. இதில், ரஷ்ய படைகள் முழுமையாக வெளியே உத்தரவிடுமாறு உக்ரைன் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

உக்ரைன் மீது தொடர்ந்து 5வது நாளாக ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதம் தெரிவித்தன. அதன்படி, பெலாரஸ் நாட்டின் கோமல் நகருக்கு உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் குழு பெலாரஸ் சென்றடைந்தது. இதனைத்தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பெலாரஸில் ரஷ்யா- உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை துவங்கியது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் பிரதிநிதிகள், ‛உடனடியாக போர் நிறுத்த வேண்டும்; அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும், கிவ் நகரிலிருந்து ரஷ்ய ராணுவத்தில் பெரும் படைகள் 30 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டு உள்ளது,’ என தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.