முதல் கட்ட ஓட்டுப்பதிவு நிறைவு| Dinamalar

இம்பால்:முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 78.03 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

latest tamil news

தொடர்ந்து, இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.