மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்புப் போராட்டம் – பல இடங்களில் முடங்கிய போக்குவரத்து <!– மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்புப் போராட்டம் – பல இடங்… –>

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து பாஜகவினர் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கிள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலந் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. பீர்பூம், சிலிக்குரி, ஹூக்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ரயில்கள் செல்வது தாமதமானது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.