ரஷியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!

வாஷிங்டன்,
ரஷிய ஆதரவு நாடான பெலாரஸில், தூதரக செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்தியது. ரஷியாவிலிருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் குடும்பத்தினருடன் வெளியேறலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. 

மாஸ்கோவில் உள்ள அமெரிக தூதரகத்தில் பணியாற்றும் ‘மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து’ பிற ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாமாகவே வெளியேறும்படி அறிவுறுத்தி உள்ளது. பெலாரசில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. 
மேலும், உக்ரைன் படையெடுப்பிற்கு கடுமையான பதிலடியாக, ரஷிய மத்திய வங்கி பரிவர்த்தனைகளை அமெரிக்கா துண்டித்துள்ளது, ரஷிய முதலீட்டு நிதியை தடை செய்துள்ளது.
மேலும் அமெரிக்க அரசு ரஷிய நிதி அமைப்புக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரஷிய மத்திய வங்கியில் முதலீடுகளை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.
அதன்படி, ரஷிய கூட்டமைப்பின் தேசிய வள நிதியம் அல்லது ரஷிய கூட்டமைப்பின் நிதி அமைச்சகம் மற்றும் ரஷிய கூட்டமைப்பின் மத்திய வங்கி சம்பந்தப்பட்ட  பரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டுள்ளன.மேலும், மேற்கொண்ட எந்தவொரு பரிவர்த்தனையையும் எந்தவொரு அமெரிக்க நபரும் மேற்கொள்ள தடை செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.