வான்வழித் தாக்குதலுக்கு ரஷ்ய ராணுவம் திட்டம்.. கீவை விட்டுப் பொதுமக்கள் வெளியேற அறிவிப்பு <!– வான்வழித் தாக்குதலுக்கு ரஷ்ய ராணுவம் திட்டம்.. கீவை விட்ட… –>

உக்ரைனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதில் ரஷ்யா வலிமையாக உள்ளதாகவும், கீவ் நகரைவிட்டுப் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்றும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யப் படையினரை எதிர்த்து உக்ரைன் ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர். ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வான்வழித் தாக்குதலில் தாங்கள் வலிமையாக உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

 

கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் சுதந்திரமாக நகரைவிட்டு வெளியேறலாம் என்றும், கீவ் – வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக வெளியேறுவது பாதுகாப்பானது என்றும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல் வலிமையைக் கூறுவதும், பொதுமக்களை வெளியேறச் சொல்வதும் கீவ் நகரின் மீது ரஷ்ய ராணுவம் மீண்டும் மிகப்பெரும் அளவில் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவின்படி ரஷ்ய விமானங்களைத் தங்கள் வான்பரப்பில் அனுமதிப்பதில்லை என கிரீஸ் நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.