உக்ரைன் மீதான போர் தொடரும்: ரஷ்யா| Dinamalar

கீவ்: உக்ரைன் மீதான போர் தொடரும், பின்வாங்க போவதில்லை என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. பெலாரஸ் நாட்டில் நேற்று (பிப்.,28) நடந்த உக்ரைன் – ரஷ்யா பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், உக்ரைனின் கார்கிவ் நகரில் தற்போது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கார்கிவ் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதில் இந்திய மாணவர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக பேசியுள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறுகையில், ‛ரஷ்யா போரை தொடரும், அதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. மேற்குநாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை உக்ரைன் மீது போர் தொடரும். எல்லா இலக்குகளையும் அடையும் வரை உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடரும். ஐரோப்பாவில் இருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா அகற்ற வேண்டும்,’ என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.