பீம்லா நாயக்கை புகழ்ந்த மகேஷ்பாபு

தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை இங்கு விஜய், அஜித் போலத்தான் மகேஷ்பாபுவும், பவன் கல்யாணும்.. அங்கேயும் இருவரது ரசிகர்கள் வழக்கம்போல முரண்பட்டு கிடந்தாலும் அவர்கள் இருவரும் நட்பு பாராட்டவே செய்கின்றனர். குறிப்பாக பவன் கல்யானை வெளிப்படையாக பாராட்ட தயக்கம் காட்ட மாட்டார் மகேஷ்பாபு. அந்தவகையில் தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் வெளியாகியுள்ள பீம்லா நாயக் படம் பார்த்துவிட்டு பவன் கல்யாணின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார் மகேஷ்பாபு.

இதுபற்றி அவர் கூறும்போது, “பவன் கல்யாண் எரியும் நெருப்பு போல இருக்கிறார். என்ன ஒரு நடிப்பு..? பரபரப்பான டேனியல் சேகராக ராணாவின் திரை தோற்றம் வியக்க வைக்கிறது. சமீப காலத்தில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் எழுத்தில் உருவான படங்களில் இது ரொம்பவே சிறப்பானது. எனது லென்ஸ்மேனாக இருக்கும் ரவி கே சந்திரன் மற்றும் தமனின் இசை, இயக்குனர் சாஹர் சந்திரா என மொத்த குழுவுக்கும் எனது பாராட்டுக்கள்” என கூறியுள்ளார் மகேஷ்பாபு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.