பீர் தயாரிப்பு ஆலைகளில் தயாராகும் பெட்ரோல் குண்டு| Dinamalar

லீவ் : ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் ராணுவமும், நாட்டு மக்களும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் உள்ளனர்.இதனால், அங்குள்ள மக்கள், மது குடிப்பது குறைந்துள்ளது.

அதையடுத்து, லீவ் நகரில் உள்ள ‘பீர்’ தயாரிக்கும் ஆலையில், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பீர் பாட்டில்களை, பெட்ரோல் குண்டுகளாக மாற்றும் வேலை நடந்து வருகின்றது.காலி பாட்டில்களில், பெட்ரோல் உள்ளிட்டவற்றை நிரப்பி, நீண்ட துணி போன்ற திரியைப் பொருத்துகின்றனர். ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக இந்த பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.