7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகள் கைது <!– 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகள் கைது –>

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கூமாபட்டியைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குபதிவு செய்த போலீசார் இது தொடர்பாக ராமராஜின் உறவினரான கண்ணன் என்பவரிடம் விசாரணை செய்து அவரது செல்போனையும், ஆதார் அட்டையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி ராமராஜ் வீடு திரும்பியதால், தனது பொருட்களை திரும்ப தருமாறு கண்ணன் கேட்டுள்ளார். இதற்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

புகாரின் பேரில், ரசாயனம் தடவிய நோட்டுகளை கண்ணனிடம் பெற்றபோது உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.