அரசு ஊழியர்கள் செம ஷாக் – முதல்வர் இப்படியொரு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என, மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அம்மாநில
அரசு ஊழியர்கள்
, ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது,
ஜார்க்கண்ட்
மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரதீப் யாதவ், மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா? என, கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர்
ஹேமந்த் சோரன்
, இது தொடர்பாக தற்போதைக்கு எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, அதாவது கடந்த 24 ஆம் தேதி,
அரசு ஊழியர்கள்
சிலர், முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்தித்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், தற்போதைக்கு அது தொடர்பான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்திருப்பது, அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.