இலங்கைக்கு டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று

டீசலுடனான கப்பல் ஒன்று, இன்று (02.03.2022) இலங்கைக்கு வர உள்ளது.

இதற்கு செலுத்த வேண்டிய டொலர்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றுமொரு டீசல் கப்பலுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த டீசல் கப்பல்கள் கிடைத்தவுடன், தற்போது நிலவுகின்ற டீசல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.