உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் வெளியேறி விட்டதாக தகவல் <!– உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் வெளியேறி விட்டதாக … –>

உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் வெளியேறி விட்டதாக வெளியுறவுச் செயலர் சிருங்காலா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கீவ் நகரில் இருந்து இந்தியர்கள் யாவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டார். மொத்தம் 20 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் பல பகுதிகளில் இருந்த நிலையில், 12 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

எஞ்சிய நாற்பது சதவீதம் பேரில் பாதிப்பேர் எல்லைகளை அடைந்துவிட்டனர் என்றும், 20 சதவீத இந்தியர்கள் போர்ஆபத்து சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும் சிருங்காலா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.