உக்ரைனில் சிக்கியவர்கள் விபரம் பதிய… புதுச்சேரியில் வாட்ஸ்ஆப் எண் அறிமுகம்| Dinamalar

புதுச்சேரி : உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாநிலத்தவர்களின் விபரங்களை தெரிவிக்க, அரசு சார்பில் கூடுதலாக வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அங்கு தங்கியுள்ள புதுச்சேரி மாணவர்கள், தொழிலாளர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களை பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதனையொட்டி, உக்ரைனில் தங்கியுள்ளவர்களின் விபரங்களை சேகரிக்க புதுச்சேரி அரசு சார்பில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

latest tamil news

இந்நிலையில், நேற்று புதிதாக 94448 60663 என்ற வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, உக்ரைனில் சிக்கித் தவிப்போரின் விவரங்களை தெரிவிக்க மேற்குறிப்பிட்ட புதிய வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.