ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

உக்ரைன் மீது ரஷ்யா 7ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு படைகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதால், அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. அதேசமயம், உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா., சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா., சபை தங்களால் இயன்ற முயற்சிகளை, செய்து பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இரு நாட்டு பிரநிதிகளும் சில விஷயங்களை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ரஷ்ய விமானங்களுக்கு அமெரிக்க வான்வெளியில் பறக்க தடை!

இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட சாராம்சங்களை இரு நாட்டு பிரதிநிதிகளும் தங்களது தலைமையிடம் பரிசீலித்து அவர்கள் சொன்ன விஷயங்கள் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படவுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உக்ரைனின் விண்ணப்பத்தை
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம்
நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்பேரிலான சிறப்பு சேர்க்கைக்கான நடைமுறை தொடங்கியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் உக்ரைனின் விண்ணப்பத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.