ரஷ்யா படைகள் முன்னேறுவதை தடுக்க பாலம் தகர்ப்பு: ஆற்றை கடக்க முடியாமல் உக்ரைன் மக்கள் தவிப்பு <!– ரஷ்யா படைகள் முன்னேறுவதை தடுக்க பாலம் தகர்ப்பு: ஆற்றை கடக… –>

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஆர்ப்பரித்து ஒடும் தண்ணீருக்கு மத்தியில் சேதமடைந்த பாலத்தை ஆபத்தான முறையில் மக்கள் கடந்து செல்கின்றனர்.

கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறுவதை தடுக்க இர்பின் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தை உக்ரைன் வீரர்கள் வெடி வைத்து தகர்த்தனர். உருக்குலைந்து காணப்படும் பாலத்தில் நடக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

பாதி உடைந்து காணப்படும் பாலத்தின் கைபிடியை பிடித்தவாறு ஆற்று நீருக்கு நடுவே மெதுவாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர்  நடந்து செல்கின்றனர்.     

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.