‘வலிமை’ படத்தை அடுத்து மீண்டும் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
‘நடிப்பது என் தொழில்.. குடும்பம் என் பர்சனல்’ என்ற பாலிஸி கொண்டவர் அஜித். ஆகவே தனது குடும்பத்தினர் குறித்த விபரங்களை எல்லாம் பர்சனலாகவே பாதுகாத்து வைத்திருப்பார். இந்நிலையில் கடந்த ஜனவரி 3ம் தேதி அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல்.. அன்று தன் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள். கொரோனா சூழலினால் பிறந்த நாளை வீட்டில் சாதாரணமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மார்ச் 2-ல் அதாவது நேற்று, மகன் ஆத்விக்கின் பிறந்தநாள். ஆத்விக்கின் பிறந்த நாளோடு, அனோஷ்காவின் பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாட விரும்பிய அஜித்தின் குடும்பத்தினர், பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பர்த் டே ஃபங்ஷனை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தினரோடு ஆல் இண்டியா டூர் சென்று வந்த அஜித், இப்போதுதான் தனது குடும்பத்தினரை வெளியே அழைத்து சென்றுள்ளார். இன்னும் சில நாட்கள் பெங்களூருவில் தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே ஹைதபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தகவல். பர்த் டே கொண்டாடும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.