இந்தியர்களை மீட்கச் சென்ற 4 விமானப்படை விமானங்கள் நாடு திரும்பின <!– இந்தியர்களை மீட்கச் சென்ற 4 விமானப்படை விமானங்கள் நாடு த… –>

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்பதற்காகச் சென்ற 4 விமானப்படை விமானங்கள் நாடு திரும்பின.

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்ததால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்ட நிலையில் ஏர் இந்தியா, இன்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களுடன் சேர்த்து, இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானங்களும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டன.

இந்த நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்டுக் கொண்டு 4 விமானப்படை விமானங்கள் ஹிண்டன் விமானப்படைத் தளத்திற்கு வந்தடைந்தன. அந்த விமானங்களில், 800க்கும் மேற்பட்டோர் வந்திறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உக்ரைனின் இருக்கும் இந்தியர்களை மீட்க மேலும் 3 விமானங்களை இயக்கவிருப்பதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.