உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெறுகிறது.
இதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் உள்பட 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 11 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்
இரண்டு கோடியே 14 லட்சம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
676 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். எஞ்சிய 54 தொகுதிகளுக்கான ஏழாம் கட்ட இறுதித் தேர்தல் இம்மாதம் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.