ஒரு நல்ல மனிதரை இப்படியா சோதிக்க வேண்டும்: விஜயகாந்த் குறித்து மனம் வருந்திய எஸ்.ஏ.சி

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர்
விஜயகாந்த்
. ரஜினி, கமல் உச்ச நடிகர்களாக திகழ்ந்த சமயத்தில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்து சினிமாவில் கோலோச்சியவர். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பொது வாழ்வில் இருந்து விலகி இருக்கும் விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து அனைவரும் கண் கலங்கினார்கள்.

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்துடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் விஜயகாந்தை ஹீரோவாக அறிமுகப்படுத்திய எஸ் ஏ சந்திரசேகர் அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 19 படங்களை விஜயகாந்தை வைத்து இயக்கியுள்ளார்.

அதில் பெரும்பான்மையான படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடிய படங்கள். விஜயகாந்த் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் காம்போ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இவர்களின் படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட அங்கும் ஹிட்டடிக்கும்.

மாற்றத்திற்கு தயாராக இருங்கள்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா சூசக அழைப்பு..!

மேலும் நடிகர் விஜய் ‘நாளைய தீர்ப்பு ‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு சினிமாவில் ஒரு சிறந்த எண்ட்ரியாக அமைந்தது விஜய்காந்த் நடித்த ‘செந்தூர பாண்டி‘ படம் தான். 90 களில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தாலும் எஸ் ஏ சந்திரசேகருக்காக ‘செந்தூர பாண்டி‘ படத்தில் நடித்து கொடுத்துள்ளார் விஜயகாந்த். இந்நிலையில் விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் பார்த்து மனம் வருந்தி பேசியுள்ளார்
எஸ்.ஏ. சந்திரசேகர்
.

விஜயகாந்த் நடிகர் மட்டுமல்ல எனக்கு ஒரு நல்ல நண்பர் . நானும் அவரும் இணைந்து கிட்டத்தட்ட 17 படங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றியுள்ளோம். தமிழ் சினிமாவில் விஜயகாந்தைப் போல் உதவி செய்பவர் யாரும் இல்லை. கடந்த 2,3 வருடங்களாக அவரை காண வேண்டும் என பலமுறை முயற்சித்தும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நடைபெற முடியாமல் போனது. ஒரு நல்ல மனிதரை இப்படியா சோதிக்க வேண்டும் என விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து மனமுடைந்து பேசியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

வலிமை வெளியீடு; குதூகலத்தில் அஜித் ரசிகர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.