குர்கானில் பயங்கர விபத்து: டிரக் மீது கார் மோதி 5 பேர் பரிதாப பலி

அரியானா மாநிலம், குர்கான் மாவட்டம் பினாவுலா கிராமத்தில் உள்ள டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 5 பேருடன் கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே சென்றுக் கொண்டிருந்த டிரக் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரில் இருந்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், உடல்களை மீட்டு பிரேத பரிசசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தில் இறந்தவர்களின் அடையாளங்களை கண்டு வருவதாக உதவி போலீஸ் கண்காணிப்பாளர் கஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. போரை நிறுத்துமாறு புதினிடம் நாம் கேட்க முடியுமா?: உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.