தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர்
சுந்தர் சி
. இவர் இயக்கத்தில் கடைசியாக ‘அரண்மனை 3’ படம் வெளியாகி மெஹா ஹிட் அடித்திருதது. இந்நிலையில் மிகப்பெரிய படத்தில் நட்சத்திர பட்டாளத்துடன் தனது அடுத்த பட பணிகளை துவங்கியுள்ளார் சுந்தர் சி.
ஜெய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா, அம்ருதா ஐயர் மற்றும் ரைசா வில்சன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். மேலும் இந்தபபடத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சின்னத்திரை பிரபல தொகுப்பாளினி டிடியும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பின் இடைவெளியின்போது வீடியோ காலில் தனது மனைவி குஷ்புவுடன் இயக்குனர் சுந்தர்சி பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த டிடி எங்கள் டைரக்டர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார், அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று செல்லமாக கண்டிக்க,
குஷ்பு
வெட்கத்துடன் ’நான்தான அவரை டிஸ்டர்ப் பண்ண முடியும்’ என்று கூறுகிறார்.
சட்டுபுட்டுன்னு ‘ஏகே 61’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணுங்க போனி: பயர் மூடில் அஜித் ரசிகர்கள்..!
அதற்கு டிடி, ‘பாத்துக்கோங்க மக்களே, என்ன ஒரு கணவன் மனைவி. எல்லோரும் பாத்து கத்துக்கோங்க’ என்று கூறுகிறார். இந்த க்யூட்டான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் டிடி.
ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அண்மையில் சம்யுக்தா இணைந்தார். மிகப்பெரிய நட்சத்திர பட்டளத்துடன் இந்தப்படம் உருவாகி வருவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் உளறிய Sandy Master…நக் ஷாவுக்கு சுத்தமா டான்ஸ் வராது!