சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் விவரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னையில் நாளை (04-02-2022)  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கே.கே நகர் பகுதி: ரங்கராஜபுரம் டேங்க் தெரு, சூளைமேடு ராதகிருஷ்ணன் நகர், சூளைமேடு சாலையின் ஒரு பகுதி கோடம்பாக்கம் கங்கா நகர் வடபழனி வெள்ளாள தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி: தொழிற்பேட்டை கிண்டி, ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, ஆதம்பாக்கம் பகுதி, வாணுவம்பேட்டை பகுதி, தில்லை கங்கா நகர் பகுதி, புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர் பகுதி, மூவரசம்பேட்டை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் கங்கா நகர் பகுதி, புழுதிவாக்கம் பகுதி, நங்கநல்லூர் பகுதி, மூவரசம்பேட்டை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் பகுதி: சித்தலம்பாக்கம் நொத்தன்சேரி, மேகலா நகர், வேங்கைவாசல், பாரதி நகர் மற்றும் பெத்தேல் நகர்.

பட்டினம்பாக்கம் பகுதி: சீனிவாசபுரம், டுமிங் குப்பம், சாந்தோம் நெடுஞ்சாலை, மந்தவெளி பாக்கம் மந்தவெளி பகுதி, சந்தோம் பகுதி கச்சேரி ரோடு, நொச்சிக் குப்பம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.