தமிழகத்தில் இன்று 292 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  03/03/2022

சென்னை

மிழகத்தில் இன்று 292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,50,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 52,935 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,45,57,853 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

 

இன்று 292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதில் 3 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை 34,50,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 38,010 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 778 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,08,373 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 3,950 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,50,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,065 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 187 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,40,158 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 984 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 43 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 34 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,652 பேர் பாதிக்கப்பட்டு 2,614 பேர் உயிர் இழந்து 3,26,490 பேர் குணம் அடைந்து தற்போது 548 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,35,146 பேர் பாதிக்கப்பட்டு 2,657 பேர் உயிர் இழந்து 2,32,069 பேர் குணம் அடைந்து தற்போது 420 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.