பட்டாசு ஆலையில் தீவிபத்து- 3 தொழிலாளர்கள் படுகாயம் <!– பட்டாசு ஆலையில் தீவிபத்து- 3 தொழிலாளர்கள் படுகாயம் –>

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் படுகாயமடைந்தனர்.

பொன்னையாபுரம் கிராமத்தில் குமரன் என்பவருக்குச் சொந்தமான செந்தூர் பட்டாசு தொழிற்சாலையில், சிறிய ரக  பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் உணவு இடைவெளியில் இருந்தனர்.

அப்போது, மருந்து நிரப்பும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ பரவியது. இதனையடுத்து, அங்கிருந்த 3 தொழிலாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.