போரை நிறுத்துமாறு நாம் ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்க முடியுமா? தலைமை நீதிபதி என்.வி.ரமணா <!– போரை நிறுத்துமாறு நாம் ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்க முடியு… –>

போரை நிறுத்துமாறு நாம் ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்க முடியுமா? என வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.

உக்ரைனில் சிக்கியுள்ள பாத்திமா அஹானா என்ற மருத்துவ மாணவியின் குடும்பத்தினர், மால்டோவா – ருமேனியா எல்லையில் மாணவர்கள் சிக்கித் தவிப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்தனர்.

இதன் விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் நாம் என்ன செய்ய முடியும்? நாளை புடினுக்கு உத்தரவு பிறப்பிக்கச் சொல்வீர்களா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் மீது அனுதாபமும், அக்கறையும் தங்களுக்கும் உள்ளதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அவர்களை மீட்க மத்திய அரசு தனது பணியை செய்து வருதாக குறிப்பிட்டார்.

மேலும், மீட்பு பணிகளை விரைவுப்படுத்த 4 அமைச்சர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.