நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவை பற்றி தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். தன்னை யாரோ அறைந்து 5 விரல் பதிந்ததை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram A post shared by Kushboo Sundar (@khushsundar)
#SayNoToViolence #StandWithMe #SpeakUpNow ஆகிய ஹேஷ்டேகுகளை பயன்படுத்தியிருக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குஷ்பு
அக்காவை அறைந்தது யார், சுந்தர் சி.யா, சொல்லுங்க ஒரு கை பார்க்கலாம் என்றெல்லாம் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சுந்தர் சி. ஏங்க அடிக்கப் போறார். அவர் தான் மனைவியின் வளர்ச்சியில் மகிழ்ச்சி காண்பவராச்சே. இது நிஜமான அறையாக இருக்காது, படம் அல்லது டிவி சீரியலுக்கான விளம்பரமாகத் தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைதளவாசிகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
தன்னை தாக்கியது யார், இப்படிப்பட்ட விஷயத்தை துணிந்து செய்தவரை குஷ்பு என்ன செய்தார் அல்லது செய்யப் போகிறார் என்பதை தன் அடுத்த போஸ்ட்டில் தெரிவிப்பாரா என்பதே ரசிகர்களின் கேள்வி. #meera என்கிற ஹேஷ்டேக் இருப்பதால் இந்த அறை அது தொடர்பாகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தேதி குறிச்சாச்சு: ‘குட் நியூஸ்’ சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்