ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு அசாதாரமாண சூழல் நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.

உக்ரைனில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. கெர்சன் நகரம் ரஷ்யாவின் கட்டுக்குள் வந்த நிலையில், தலைநகர் கீவ், வடகிழக்கு நகரமான கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை கைபற்ற ரஷ்ய துருப்புகள் பல்முனைத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு தரப்புக்கும் இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில், இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயம், அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதால் அச்சம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய
ஜாபோரிஜியா
அணு மின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை உக்ரைன் அரசு உறுதி படுத்தியுள்ளது. முன்னதாக, ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருவதற்கிடையே, உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜாபோரிஜியா
அணு மின் நிலையம்
மீது இன்று அதிகாலை ரஷ்ய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின.

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை? அப்படி என்ன இருக்கிறது அந்த கொலை ஆயுதத்தில்?

இதனால், ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், அணுஉலையில் பற்றி எரியும் தீயை அணைக்கவிடாமல் உக்ரைன் தீயணைப்பு வீரர்களை ரஷ்யப் படையினர் தடுத்ததாக தகவல் வெளியாகின.

ஜாபோரிஜியா அணுஉலை வெடித்துச் சிதறினால் செர்னோபில் போன்று 10 மடங்கு அழிவு ஏற்படும். ரஷ்யா உடனடியாக தாக்குதலை நிறுத்தி, தீயணைப்பு வீரர்களை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா வேண்டுகோள் விடுத்தார். அதன் தொடர்ச்சியாக, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ரஷ்ய படைகளால் தாக்குதலுக்கு உள்ளான ஜாபோரிஜியா அணு மின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜாபோரிஜியா அணு மின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், கதிரியக்க அளவுகள் அதிகரித்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், அணு உலை உள்ளிட்ட உக்ரைன் அரசு சொத்துகளை கைபற்றுவதே ரஷ்யாவின் நோக்கமாக இருக்கும், அணு உலையை அழிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு கிடையாது; ரஷ்யா நினைத்தால் ஒரே ஏவுகணையில் அணு உலையை அழித்து விடும். அப்படி செய்தால் அது ரஷ்யாவுக்கு ஆபத்துதான் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.