கல் குவாரியில் பாறைகள் உருண்ட விபத்தில், நான்கு தொழிலாளர்கள் மீட்பு| Dinamalar

சாம்ராஜ் நகர் : கல் குவாரியில் பாறைகள் உருண்ட விபத்தில், நான்கு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆறு பேரை காணவில்லை; அவர்களை தேடும் பணி நடக்கிறது.சாம்ராஜ் நகரின் குண்டுலுபேட் அருகே உள்ள பொம்மலாபுரா கிராமத்தை சேர்ந்த மகேந்திரப்பா என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இதில், கேரளாவை சேர்ந்த ஹகீம், 45, என்பவர் ஐந்து ஆண்டுக்கு குத்தகை பெற்று கல் குவாரி நடத்தி வருகிறார்.இங்கு ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பாறைகள் உருண்டு விழ ஆரம்பித்தன. இந்த பாறைகள் தொழிலாளர்கள், டிப்பர், ஜே.சி.பி., மீது விழுந்தன. இதில், பாறைகளின் அடியில் 10 பேர் சிக்கியதாக கூறப்பட்டது. இவர்களில் நான்கு பேர் மீட்கப்பட்டனர். ஆறு பேரை காணவில்லை; அவர்களை தேடும் பணி நடக்கிறது. ஆறு டிப்பர்கள், ஜே.சி.பி.,யும் சேதம் அடைந்தன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.