மாரி செல்வராஜின் வைரல் ட்வீட்..இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!

பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பிப்பார்க்க வைத்தார் மாரி செல்வராஜ். அதன் பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இவ்விரு படங்களும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில்
மாரி செல்வராஜ்
அடுத்தது யாருடன் பணியாற்ற போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மாரி செல்வராஜ் உதயநிதியை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக தகவல்கள் வந்தன. அதைத்தொடர்ந்து தற்போது இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தனுஷ் கண்டுக்கவே மாற்றாரே..வருத்தத்தில் அவர்கள்..!

மாமன்னன் என பெயரிடப்பட்ட இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசைப்புயல்
AR ரஹ்மான்
இசையமைக்க இப்படத்தை
உதயநிதி
தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலுவும் நடிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போது சினிமாவில் தனது செகண்ட் ரவுண்டை ஆரம்பித்திருக்கும்
வடிவேலு
தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவருகிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனான நடித்து வரும் வடிவேலு, தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் நடிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. அதைத்தொடர்ந்து தற்போது உதயநிதியின்
மாமனிதன்
படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதைப்பற்றி ட்விட்டரில் பதிவிட்ட மாரி செல்வராஜ், ஒரு தொடர் கனவு நிறைவடைந்தது, மாமன்னனில் வைகைப்புயல் என சந்தோஷமாக ட்வீட் போட்டுள்ளார். இதைவைத்து பார்க்கையில் இவர் தீவிர வடிவேலு ரசிகர் என்பது தெரியவருவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.