சென்னையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.! <!– சென்னையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்ம… –>

சென்னை ஆவடி அடுத்த காட்டூர் தொழிற்பேட்டையில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான 2 டன் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையிலுள்ள நுண்ணறிவு மற்றும் புலனாய்வு வனத்துறை பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், குடோனின் கதவை உடைத்து சோதனை செய்த போது, அங்கு செம்மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கும்மிடிப்பூண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக குடோன் உரிமையாளரை தேடி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.