பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர்.. போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 48 வயது மின்வாரிய அதிகாரி ராஜசேகரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் பள்ளி மாணவி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறனர்.

அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மின்வாரிய அதிகாரி ராஜசேகர் பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.