பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி | Dinamalar

புதுடில்லி :ஒடிசாவில் அதி நவீன, ‘பிரமோஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரஷ்யாவின் என்.பி.ஓ.எம்., நிறுவனத்துடன் இணைந்து, பிரமோஸ் அதிநவீன ஏவுகணைகளை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்து வருகிறது.

நிலத்தில் இருந்து மட்டுமல்லாமல், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களிலிருந்தும் செலுத்தக்கூடிய வகையில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மணிக்கு 3,400 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ., அமைப்பு தொடர்ந்து பரிசோதித்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும், அதிநவீன பிரமோஸ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் இருந்து அந்த ஏவுகணை ஏவப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அந்த ஏவுகணை துல்லி யமாக தகர்த்ததாக, கடற்படை தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.