தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:
மிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், சென்னையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மழைக்கு வாய்ய்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.