பாலோ ஆன் : ரவீந்திர ஜடேஜா-வின் டிக்ளர் முடிவால் இலங்கை அணியை 174 ரன்களில் சுருட்டியது இந்தியா

இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 174 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி நேற்று இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று காலை ஆட்டம் மீண்டும் துவங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை 66 ரன்கள் மட்டுமே சேர்த்து 174 ரன்களுக்கு ஆலவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 7 முதல் 11 வரை களமிறங்கிய பேட்ஸ்மேன் வரிசையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

574 ரன்கள் என்ற நிலையில் 8 வது விக்கெட் விழுந்ததும் அடுத்து களமிறங்க இந்திய பேட்ஸ்மேன் தயாராக இருந்த நிலையில் அணியினருக்கு டிக்ளர் செய்யும் முடிவை ஜடேஜா வழங்கி உள்ளார்.

இன்னும் 25 ரன்கள் எடுத்தால் இரட்டை சதத்தை எளிதில் எட்டிவிடும் நிலையில் இருந்த போதும், இரண்டு நாட்களாக பௌலிங் செய்து சோர்வாக உள்ள இலங்கை அணியினரை இப்போது களமிறக்கினால் நாம் எளிதாக வெல்லலாம் என்ற யோசனையை ஜடேஜா தெரிவித்துள்ளார்.

அவரது யோசனைக்கு ஏற்ப இலங்கை அணியை முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆலவுட் ஆக்கியுள்ள இந்திய அணி இலங்கையை பாலோ ஆன் செய்ய பணித்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.